உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
130

❖ மறைமலையம் - 3 ❖

மண்ணுலகத்தாரால் உரைத்தற்கும் எழுதுதற்கும் அரிதான துலக்கமும் அளவற்ற அன்பும் கதிர் விரிக்கும் வடிவமும் வாய்ந்த ஒரு விளங்கு மொளியை யான் காணக்கூடியதா யிருந்தது; அத்திருவுருவத்தின் கட்டளைகளை இப்போது யான் உங்களுக்கு எடுத்துப் புகல்கின்றேன். ‘நீங்கள் ஒருவரை யொருவர் நேசிக்கக்கடவீர்கள்’ என்பதே அதுவாம். இம் மொழிகளானவை தேவதூதர்கள் ஆவேசங்கள் முதலியோர் உள்ளங்களிற் புகுந்து அவ் வழியே உங்கள் நெஞ்சங்களிலும்கூட நுழைந்து, அச்சம் பகை வயிற் றெரிச்சல் போராட்டங்கள் முதலியவற்றை யெல்லாம் ஓட்டி இந்த நொடியிலிருந்தே உங்களை இறைவன் திருவருளோடு ஒன்றுபடுத்தா நிற்கும்.

என்றிதுகாறும் எடுத்துக் காட்டிய உண்மைகளால் சூக்கும ஒளியாகாயத்தின் இயல்புகளும், அதன்கண் உலவும் சூக்கும சரீரவாசிகளின் பல திறப்பட்ட நிலைகளும் இனிது விளங்கா நிற்கும். அஃது அங்ஙனமாயினும், இங்கெடுத்துக் காட்டிய சரித்திர உதாரணங்களிற் பெரும்பாலன மேல் நாடுகளில் வசிக்கும் வெள்ளைக்காரர் தமக்குரிய அனுபவங்களா யிருத்தலின், மறுமையுலகங்கள் என்று ஈண்டெடுத்து விளக்கப்பட்டவை அனைத்தும் வெள்ளைக்காரர் ஆவிகள் மாத்திரம் நிறைந்தன வாயிருக்கும் போலும் என்று கருதி ஐயமுறுவார்க்கு அவ்வையம் நிகழாமைப் பொருட்டு அதைப்பற்றிய உண்மையினையும் ஒரு சிறிது தெளிவுப்படுத்திக் காட்டுவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/163&oldid=1624473" இலிருந்து மீள்விக்கப்பட்டது