உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
260

❖ மறைமலையம் - 3 ❖

அதனால் உந்தப்படும் மின் ஆற்றலை அவ்விரல் நுனிகளின் வழியே பாயச்செய்க. அங்ஙனம் செய்யும்போது அவ்விரல்களை நடுங்குமாறு அசைத்தல்வேண்டும். அப்படிச் செய்தலால் அந்த மின்ஆற்றல் அவ்விரல் நுனிகளில் இறங்கிச் செவ்வனே பாயும். இதனோடு அவ்விரல் நுனிகளின் முகமாய் மேலிருந்து கீழ் நோக்கியபடியாய் வாயால் காற்றை ஊதுதலும் செய்தால் அம் மின்ஆற்றல் மிகவுஞ் செவ்வனே பாயும். அது நிற்க.

மேற்சொல்லியவாறாய் நேணாயுற்ற இடத்திற் கைவிரல்களை நேரே பிடித்து அங்கு மின்னாற்றலைப் பாய்ச்சியபின், தூய மெல்லிய துணியை நான்காய் மடித்து அவ்விடத்தின் மேல் வைத்து, அதன்மேல் வாயைவைத்து வெதுவெதுப்பு உண்டாகும் படி ஊதுதல் வேண்டும். இங்ஙனம் செய்தலால், அவ்விடத்திற் பாய்ந்த மின்னாற்றல் அதில் நன்றாய்ப் பரவி அங்குள்ள பிணியை விரைவில் அகற்றும் என்க.



 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/293&oldid=1626146" இலிருந்து மீள்விக்கப்பட்டது