உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
291

இருந்தால் மட்டும் அவள் தொடர்ந்து எழுதிக்கொண்டு போவாள். அதுநிற்க.

தமது வீடு நோக்கி வழிச்சென்ற ஒருவர் தாம் செல்லும் வழியின் ஓரமாய் உள்ள வேலிக்குச் சிறிது அப்பால் ஒரு கொடி முந்திரிப் பந்தரின்மேல் உச்சியிற் புதுமையானதொன்று அமர்ந்திருக்கக் கண்டார். அப்போது நள்ளிருட் காலம். உடனே அவர் அங்கேயே நின்றுகொண்டு அதனை உற்று நோக்கினார். அஃது அப்பந்தரின்மேல் இயங்குவதுபோற் காணப்பட்டது. அவர் அதனோடு பேசிப் பார்த்தார்; ஆனால் அஃது ஏதுமே விடைசொல்லவில்லை. அந்நேரத்தில் ஊர்காவற் சேவகர் ஒருவர் அவ்வழியே வந்தார். உடனே அவர் அச்சேவகரை அருகழைத்து அவ்வுருவத்தைக் காட்டினார். அதனைக் கண்டதும் அச்சேவகர் ‘ஓ! அஃதொரு பெண்பிள்ளை’ என்றார். அதற்கு மற்றவர் ‘அப்படியானால் அவள் தூக்கத்தில் இருக்கவேண்டும்?’ என்று சேர்ந்து சொன்னார். இங்ஙனம் அவ்வுருவத்தைக் குறித்து ஒரு முடிவுக்கு வந்த பின், அவர்கள் அத்தோட்டத்தினது கதவைத் திறந்து கொண்டு உள்நுழைந்து அக்கொடி முந்திரிப் பந்தரண்டை போய் அப்பெண்ணைக் கூப்பிட்டுப் பார்த்தார்கள்; ஆனால், விடை கிடைக்கவில்லை. அதன்மேல் அவ்வூர் காவற்சேவகர் அப்பந்தரின்மேல் ஏறலானார்.

அதனால் அப்பெண் அவ்விடத்தைவிட்டு மிகவுங் கிளர்ச்சியோடும் அதன்மேல் நீள ஓடி அப்பந்தரின் ஓரத்திற் சென்று, அங்கிருந்து எட்டடி விலகியிருந்த வேறொரு மரப்பந்தரின்மேல் ஒரே குதியில் தாவி ஏறினாள். இவ் அருஞ்செயல் அவர்களைப் பெரிதும் வியப்புறுத்தினமையால், அவர்கள் அத்தோட்டத்தின்கண் உள்ள வீட்டாரைப்போய் எழுப்பிவிட்டு, அவர்களது மரப்பந்தலின்மேல் தூக்கத்தில் நடப்பவள் ஒருத்தி இருக்கின்றாள் எனத் தெரிவித்தனர். அவர்களெல்லாரும் வீட்டை விட்டு வெளியே வந்து, எல்லாருமாய் அவளைப் பின்றொடர்ந்து ஓடினார்கள். இவர்கள் இங்ஙனம் பின்றொடர்ந்து வருதலும் அப்பெண் பின்னும் விரைவாய் அம் மரப் பந்தலின்மேல் ஓடி, அத்தோட்டத்து மாளிகையின் தாழ்வாரத்து உச்சிமேல் தாவினாள். பிறகு அவள் அங்கிருந்து ஓடி அவ்வீட்டின் நடுமேலுச்சியிற் சென்று, அவ்விடத்திருந்த (Chimney) புகைப்போக்கியின்மேற் சாய்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/324&oldid=1626556" இலிருந்து மீள்விக்கப்பட்டது