உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18

❖ மறைமலையம் - 3 ❖

நினைத்துப் பனம் பழத்தை வேண்டியமட்டும் புசித்தவன் ஒருவன் இன்னுஞ் சிலநாட் கழித்துப் பித்தநோயாற் பிணிக்கப்பட்டு வருந்துதல்போல இப்போது இஃது எனக்கு நல்லதெனக் கருதித் தீயவழியில் ஒழுகினோன் மறுமையில் அதனால் வருந்துன்பத்திற்கு உள்ளாவது நிச்சயம். ஆகையால், இந்நிலவுகத் தினுஞ் சிறந்த வேறு உலகங்கள் உள்ளன என்றும், அவ்வுலகங்களிற் சஞ்சரிப்பதற்கு இந்த உடம்பைக் காட்டினும் இன்னும் வேறு உடம்புகள் உள்ளன என்றும் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டுவது ஒவ்வொருவருக்கும் முதன்மை யான கடமையாம். இந்த உடம்பு அழிந்துபோகவே எல்லாம் அழிந்துபோகும் என்று எண்ணுவதும் சொல்லுவதும் பெரும் பிழையாகும்.


 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/51&oldid=1626157" இலிருந்து மீள்விக்கப்பட்டது