இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖ |
சூக்கும உடம்பில் நின்ற யூலியா என்னும் அவ் வடிவமானது அத்துரைமகன் பக்கத்தே நின்று அவர் கையைப்பிடித்து எழுதத் தொடங்கியது. அஃது அவர் கையைப்பிடித்து எழுதுவது சாமானிய மனிதர் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அகக்கண் இயற்கையிலேயே திறக்கப்பட்டுள்ள சிலர் கண்களுக்கு மாத்திரம் மிகவும் தெளிவாகத் தோன்றியது.
இங்ஙனம் அந்த யூலியா என்னும் பரிசுத்த பெண்மணியின் வடிவம் எழுதிய பல கடிதங்களுள் அது தன் சினேகிதியான எல்லன் என்பவளுக்கு முதன்முதல் எழுதிய கடிதத்தை இங்கே தமிழில் மொழிபெயர்த்து எழுதுகின்றோம்.