❖ மறைமலையம் - 3 ❖ |
ஸ்டெட் : அன்புள்ள கார்டினல் அவர்களே! கிளாட்ஸ்டன் துரையவர்கள் சொல்லியவெல்லாம் தாங்கள் கேட்டீர்களன்றோ? திரும்பவும் அவர் இங்கே வருவது அவருக்கு மனவருத்தத்தை உண்டு பண்ணுமோ?”
கார்டினல் மான்னிங் : “இல்லை, இங்கே திரும்பவும் வருவது அவருக்கு எந்தவிதமான மனவருத்தமும் உண்டாக்கவில்லை; மேலும் அவரும் நானும் நேசித்து வந்த அறிவில்லாத குருட்டுச் சனக்கூட்டத்திற்கு அஃதெவ்வளவோ பயன் றருவதாயிருக்கும்.
ஸ்டெட்: “இன்னும் ஏதாவது வரப்போகின்றதா?”
உவில்லி சொல்லுகின்றது : “தந்தையே! இந்த மந்திரக் கூட்டத்தை இப்போது பிரித்துவிடுங்கள். கிளாட்ஸ்டன் துரையவர்கள் இங்கே வருவதற்காக எவ்வளவோ பிரயாசை உண்டாயிற்று; யாரும் இளைப்படையும்படி நாங்கள் கோரவில்லை. அரசாங்க வியவகாரிகள் பலர் இங்கே இந்தக் காலைப்பொழுதில் வந்திருக்கிறார்கள். இன்னுங் கிளாட்ஸ்டன் துரையவர்கள் பேசுவதைக் கேட்டவர்களும் பலர்.”
இவ்வளவோடு ஸ்டெட் துரையவர்களுடன் கூடிய மந்திரக் கூட்டத்திற்கும், கிளாட்ஸ்டன், யூலியா முதலான சூக்குமசரீர வாசிகளுக்கும் நடந்தேறிய ரையாடல் முடிவுபெற்றது.
மேலெடுத்துக் காட்டிய இரண்டு நிகழ்ச்சிகளும் மெய்யாக நடந்தனவாகும். ஸ்டெட் துரையவர்களுக்கும் யூலியா முதலான ஆவேச வடிவங்கட்கும் இப்படிப்பட்ட உரையாடல்கள் நாளதுவரையில் நடந்தே வருகின்றன. இவை போன்ற உண்மை நிகழ்ச்சிகளைச் சிறிதாயினும் நம்பாமல் பிதற்றித் திரிவோர்களும் ஸ்டெட் துரையவர்கள் பிரத்தியட்சமாகச் செய்து காட்டும் இவை தம்மைக் கண்டு வாய்பேசாமற் போகின்றார்கள். மேலும், இவற்றை அத் துரைமகனார் இரகசியமாகச் செய்து காட்டலின்றிப் பலருங் குழுமியிருக்கின்ற சபை நடுவிலே நடத்தி மெய்ப்பித்து விடுகின்றார். சூக்குமசரீர வாசிகளான ஆன்மாக்களோடு நாம் கலந்துறவாடக் கூடுமென்றும், அவர்கள் இம் மண்ணுலகத்துலவிய தூல தேகத்தைக் கழித்துவிட்டுப் போன