இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2
மறைமலையம் - 30 ×
இந்நூலைப் பற்றிய குறிப்புரை...
1929 ஆம் ஆண்டு திருப்பாதிரிப் புலியூரில் நிகழ்ந்த சைவர் மாநாட்டிற்குத் தலைமையேற்று அடிகள் ஆற்றிய உரை இந்நூலாகும். இந்நூற் கருத்தை மறுத்தார் ஒருவரை மறுத்தும் தம்முரை செவ்விய உரையே என்பதை நிலைப்படுத்தியது இந்நூலின் த இரண்டாம் பகுதியாயிற்று.
சைவத்தின் அடிப்படைக் கொள்கைகளாகிய இறை உயிர்தளை என்பன தொல்காப்பியர் நாள் தொட்டே வழக்கில் உள்ளமையும் இன்பமும் பொருளும் அறனும் என்னும் முப்பொருள் கொள்கைச் சிறப்பும், சீர்திருத்தமென நாம் விரும்புவனவெல்லாம் பண்டே கொண்டிருந்த சிறப்பும் விளக்குவது இந்நூல்.
இரா. இளங்குமரனார் இந்திய இலக்கியச் சிறப்பிகள்