தொல்காப்பியம் காலத்துக்கு முன் இருந்த
பண்டைத் தமிழரது நாகரிக நிலையினுக்குப் புத்துயிர் அளித்து, அதனை இன்றும் என்றும் நின்று நிலவச் செய்தற்குரிய பெருமுயற்சியினை இவர் தமது தலையாய கடமையாகக் கொண்டவர். காரிருளை நீக்கிப் பொருள்களை மக்களுக்குக் காட்டி மகிழ்விக்கும் வாழ்விக்கும் ஞாயிறு போலக் கால இருளில் மறைந்து கிடந்த பண்டைத் தமிழ் நூல்களாம் அருந்தமிழ்ச் செல்வங்களை எல்லாம் தமது அரிய முயற்சி யால் தமிழ் மக்கள் பெற்றுய்ய காட்டிய முதுபெரும் தமிழ்ச் சான்றோர் மறைமலையடிகள்.
மறை. திருநாவுக்கரசு
ஏறக்குறைய ஆறு அடி உயரமும், அகன்ற நெற்றியும், ஆழ்ந்த கண்களும், கூர்மையான மூக்கும், எழில் முகமும், முக்காடிட்ட தவக்கோலமும், பூங்காவி உடையும் யாவர் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளக் கூடியன வாயிருந்தன.
திரு. நாரண துரைக்கண்ணன்
உழை
உயர் உதவு
தமிழ்மண்
2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை தொலைபேசி: 044 24339030
—
600 017