பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிமேல் நீ எதையும் அடித்துப் பேசி அகப்பட்டுக் கொள்ள வேண்டாம்; ஆகவே என் கண்ணு கர்ப்பவதிதான்! ஆம்; கர்ப்ப வதியாக நடித்துவிடும்படி உனக்குச் சொல்லுகிறேன். மற்றவை களைப் பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம். இந்தக் கூத்தில்ல்ை மலடி என்ற கேலிப் பேச்சும் இனி உன்னைத் தீண்டமுடியாது: பிள்ளை இல்லாதவன் என்பதால் நான் என் வீட்டில் இழந்த மரியாதையையும் திருப்பிக் கொள்வேன். நாமே பெற்ருல்தான பிள்ளை? கண்ணு ஒரு முறை நீ சொன்னலிய-குடும்பம் என்ருல் ஏதாவது ரகசியம் இருக்கவேண்டும் என்று! அதைக் காப்பாற்ற வேண்டியது இன்று முதல் நம் வீட்டுப் பொறுப்பு. இப்படிக்கு உன் கணவன் கண்ணப்பன்.’ கண்ணுத்தாளுக்கு இந்தக்கடித்ம் துப்பறியும் கதை படிப் பது போல இருந்தது. கடிதத்தை மறைத்துக்கொண்டு அறைக் குள் ஒடினுள். | 'கண்ணுத்தா!' 'உன் மாப்பிள்ளை என்ன எழுதியிருக்கார்? 'இந்த மாதத்திலேயே வைத்துக் கொள்ளலாம் என்று எழுதியிருக்கிருர் அப்பா!” அதற்கு மேல் அவளால் பேசமுடியுமா? கண்ணுத்தாள் இப்போது கர்ப்பவதி, உண்மையான கர்ப்ப வதிகூட அப்படி நடந்துகொள்ள முடியாது; அதைவிட அதிக மாக கண்ணுத்தாள் உடலை அலட்டிக் கொண்டாள். மாமியார் வீட்டில் இப்போது கண்ணுத்தாளுக்கு அளவு கடந்த மரியாதை இட்லரிடம் இழந்த இடங்களே ஸ்டாலின் மீட் டு க் கொண்டதைப் போல கண்ணுத்தாள் உற்சாகமாக இருந்தாள். * - வளைகாப்பு விழா வெகு விமரிசையாக நடந்தது. கண்ணப் பன் பெண்ணைப்போல் வெட்கப்பட்டுக் கொண்டு யாரோடும் அதிகம் பேசாமலே நேரத்தைப் போக்கினன். 43