பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதப்புரை

இந்த நூலில் இடம் பெற்றுள்ள கதைகளை எழுதியுள்ள ஆசிரியர் கே. பி. நீலமணி அவர்கள், வாசகர் வட்டத்திற்கு நன்கு பரிச்சயமானவர். ஆனந்த விகடன், கல்கி, குமுதம், அமுதசுரபி, தினமணி கதிர் போன்ற பல்வேறு பத்திரிகைகளில் எண்ணற்ற சிறு கதைகளை எழுதியுள்ளவர்.

கலைமகளில் தொடராக வெளிவந்த இவரது "புல்லின் இதழ்கள்’ என்னும் நாவல் ஏராளமான வாசகர் களின் பாராட்டுதலைப் பெற்றது.

குழந்தைகளுக்காகப் பல சிறந்த நூல்கள் எழுதி அவற்றிற்காக குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் தங்கம், வெள்ளிப் பதக்கங்களையும்; தமிழக 、柴了ór, இலக்கியச் சிந்தனை ஆகியவற்றின் பரிசையும் பெற்றவர்.

இந்நூலில் இடம் பெற்றுள்ள கதைகள் முறையே, தினமணிகதிர், ஆனந்த விகடன், கலைமகள், தினமணி சுடர் ஆகிய பத்திரிகைகளில் வெளியானவை-இவற்றை நூலாக வெளியிட அனுமதியளித்த ஆசிரியருக்கு தொடர்ந்து எங்களது பதிப்பக நூல்களை வாங்கி ஆதரிக்கும் வாசகர்களுக்கும் நன்றி.

காயத்ரி பப்ளிகேஷன்