உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்பது மாதம் சென்றதுமே
'உப்புப் புப்'பெனக் கூறிடுவாள்.

அம்மா சொல்வதை அழகாக
அந்தக் குழந்தையும் கூறிடுமாம்.

‘என்றன் குழந்தை ஊமையென
எவரும் கூறார்’ என்மகிழ்வாள்.


பத்து மாதம் ஆனதுமே
தத்தித் தத்தித் தவழ்ந்திடுமாம்.

அத்துடன் நிற்கப் பழகிடுமாம்.
அம்மா அதனைக் கண்டதுமே,

‘என்றன் குழந்தை சப்பாணி
இல்லை’ என்றே மகிழ்ந்திடுவாள்.


அப்புறம் ஒருசில மாதங்கள்
ஆனதும், அந்தக் குழந்தையுமே,

நன்றாய் நின்று, நேராக
நடக்கப் பழகிடும்; அதுகண்டு,

‘என்றன் குழந்தை முடமல்ல’
என்றே அம்மா மகிழ்ந்திடுவாள்.