உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மலரும் உள்ளம்-1.pdf

சூறைக் காற்று வந்தது;
சுழன்று சுழன்று அடித்தது;
கூரை வீட்டைப் பிய்த்தது;
குடியைக் கெடுத்துச் சென்றது!

பலத்த மழைதான் பெய்தது;
பயிரை அழித்துச் சென்றது;
ஜலத்தி னாலே மக்களைத்
தத்த ளிக்கச் செய்தது!

நெருப்பு எங்கோ பிடித்தது;
நீண்டு பரவ லானது;
அருமை மிக்க பொருள்களை
அழித்துப் பொசுக்கிச் சென்றது!

பூமி ஆட லானது.
பிளவு நடுவே கண்டது.
ஆவி போக உயிர்களை
அதிலே அழுந்தச் செய்தது!


107