உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மலரும் உள்ளம்-1.pdf

பாப்பாப் பாட்டைப் பாடித்தந்த
பாரதி யாரைப் போற்றிடுவோம்.
கேட்போம். அவரது வார்த்தைகளை
கேட்ட படியே நடந்திடுவோம்.

‘குன்றெனத் தலைநிமிர்’ என்றிடுவார்.
‘கொடுமை தொலைந்திட வேண்டு’மென்பார்.
‘ஒன்றுபட் டாலே வாழ்வு’ என்பார்.
‘உலகிலே யாவரும் ஒன்று’ என்பார்.

‘சண்டைச் சச்சரவை மூட்டிவிடும்
சாதி ஒழிந்திட வேண்டும்’ என்பார்.
பண்டைப் பெருமை வளர்ந்திடவே
பற்பல உண்மைகள் கூறிடுவார்.

‘பெண்ணுக் குரிமைகள் வேண்டு’மென்பார்.
‘பேச்சொடு செய்கையும் வேண்டு’மென்பார்.
கண்ணிற் சிறந்த விடுதலையைக்
கண்டிட வழிதனைக் காட்டிவந்தார்.


109