உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மலரும் உள்ளம்-1.pdf

பையன் :
கோழிக் குஞ்சே, உன்கதையைக்
கூறு வாயோ, என்னிடத்தே?

கோழிக் குஞ்சு :
அப்படி யேநான் கூறுகிறேன்.
அண்ணா கதையைக் கேட்டிடுவாய்.

தாயின் வயிற்றில் சிலநாட்கள்
தங்கி இருந்தேன் அதன்பின்னே,

மூலை ஒன்றில் என்அம்மா
முட்டை யாக இட்டனளே.

அதனைக் கண்ட ஒருமனிதன்
அவனது அருமை மனைவியிடம்,

முட்டைத் தோசை சுட்டுத்தா.
மிகவும் ஆசை” என்றிடவே,

அடைக்கு வைப்போம் இதனை நாம்.
அப்புறம் சிறிய குஞ்சுவரும்.



168