உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மலரும் உள்ளம்-1.pdf

திருப்பதி மலைக்குச் செல்வதெனத்
தீர்மா னித்தார், என் தந்தை.

என்னையும் அழைத்துச் சென்றிடுவீர்”
என்றே அவரை நான்வேண்ட,

சரி’என அவரும் கூறினரே.
தந்தையும் நானும் புறப்பட்டோம்.

மலையில் ஏறிச் செல்லுகையில்
மயக்கம் எனக்கு வந்ததுவே.

களைப்பொடு மயக்கம் வருகிறது.
காலும் அத்துடன் வலிக்கிறது.

எத்தனை தூரம் இனியும்நாம்
ஏறிட வேண்டும்” என்றேனே.

இன்னும் கொஞ்சம் தூரம்தான்.
ஏறிடு வாயெ”ன அழைத்தனரே.


190