இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எனக்குச் சிறுநோய் வந்தாலும்
ஏனோ மிகவும் வருந்துகிறாய்?
உணவும் இன்றி உறங்காமல்,
உயிர்போல் என்னைக் காக்கின்றாய்.
உன்னைப் போலே வளர்த்திடுவோர்,
உலகில் உண்டோ வேறொருவர்?
என்னைக் காக்கும் அம்மாவே,
எனக்குத் தெய்வம் நீதானே.
50