உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பார்
கடலின் மீது செல்லும் கப்பல்

பார், தம்பி, பார்—அதைக்
காணப் பலர் வருவதையே
பார், தம்பி, பார்.

‘தடத’டென்று அலைகள் வந்து
பார், தம்பி, பார்—காலைத்
தழுவி விட்டுப் போவதையே
பார், தம்பி, பார்.

சங்கும் நல்ல கிளிஞ்சல்களும்
பார், தம்பி, பார்—இங்கே
சரள மாகக் கிடைக்குதடா
பார், தம்பி, பார்.

பொங்கு கின்ற பாலினைப்போல்
பார், தம்பி, பார்—இங்கு
தங்கி நிற்கும் நுரையுமுண்டு
பார், தம்பி, பார்.



83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/89&oldid=1724777" இலிருந்து மீள்விக்கப்பட்டது