பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோட்டம் நல்ல தோட்டம் - நம்மைச் சொக்க வைக்கும் தோட்டம். கூட்ட மாக நாமும் - ஒன்றாய்க் கூடி ஆடும் தோட்டம். பள்ளி முடிந்த உடனே - முன் பாய்ந்தே ஒடி வருவோம். புள்ளி மானைப் போல - நாமும் துள்ளிக் குதித்து மகிழ்வோம். வண்ண வண்ண மலரால் - நம்மை மகிழ வைக்கும் செடிகள்! தின்னத் தின்னப் பழங்கள் - மேலும் தின்னக் கொடுக்கும் மரங்கள்! கொஞ்சும் கிளியின் குரலும் - கருங் குயிலின் இசையும், அடடா! நெஞ்சை அள்ளு கிறதே! - இதை நினைக்கும் போதே இன்பம். 99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/102&oldid=859873" இலிருந்து மீள்விக்கப்பட்டது