பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்த்திகைத் தீபமம்மா - எங்கும் கண்டிடு வாயே அம்மா. பார்த்திடப் பார்த்திடவே - உள்ளம் பரவச மாகுதம்மா. கூடங்கள் எல்லாமும் - அம்மா கோபுர மேலேயும் வீடுகள் யாவிலுமே - ஒளி வீசுது பாராயம்மா. சிப்பாய்கள் நிற்பதுபோல் - அதோ தீப வரிசையம்மா, எப்போதும் இப்படியே - இருந்தால் இன்பம் பெருகுமம்மா. திருவண் ணாமலையில் - கார்த்திகைத் தீப தரிசனமாம். அருமை அருமையென்பார் - அங்கே அவசியம் போவோமம்மா. 440

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/113&oldid=859898" இலிருந்து மீள்விக்கப்பட்டது