பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுத்து விட்ட சிறகுகளோ அதற்குள் எப்படி முளைத்துவிடும்? பறந்து செல்ல முடியாமல் பட்டெனத் தரையில் வீழ்ந்ததுவே! கீழே கிடந்த அக்கிளியைக் கிழித்துக் கடித்துக் கொன்றிடவே, பாழும் பூனை ஒன்றங்கே - பாய்ந்தே ஓடி வந்ததுவே! கண்ணன் என்பவன் இக்காட்சி கண்டதும் உடனே பூனைதனைக் குண்டாந் தடியால் விரட்டினனே, கொஞ்சும் கிளியைக் காத்தனனே. கருத்துடன் சிலநாள் வளர்த்தனனே கண்ணன் அந்தக் கிளிதனையே. சிறகுகள் நன்றாய் வளர்ந்தனவே; தெம்புடன் பறக்க முடிந்ததுவே. காலையில் ஒருநாள் அக்கிளியைக் கண்ணன் கையில் எடுத்தனனே. சோலையை நோக்கிச் சென்றனனே. சுகமாய்த் தடவிக் கொடுத்தனனே. 162

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/167&oldid=859997" இலிருந்து மீள்விக்கப்பட்டது