பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுப் புடவையும் அங்குஇல்லை; பாத்திர பண்டமும் அங்குஇல்லை; பொட்டணத் துள்ளே இருந்ததெல்லாம் புத்தகம், புத்தகம், புத்தகமே! அரசர் கொடுத்தது ஐந்துநூறு. அத்தொகை யாவுமே புத்தகமாய் இருப்ப தறிந்ததும், "ஐயையோ, ஏனோ இப்படிச் செய்துவிட்டீர்! எனக்குப் பிடித்ததாய் ஏதுமில்லை, இப்படிக் காசைக் கெடுப்பதுவோ?” சினத்துடன் மனைவி பேசிடவே, சிரித்துமே பாரதி கூறினரே. "பட்டுப் புடவை, வெள்ளியிலே பாத்திரம், பண்டங்கள் வாங்காமல், பட்டணம் சென்றே வீணாகப் பணத்தைக் கெடுத்ததாய் எண்ணுகிறாய். அழிகின்ற செல்வம் நான்கொடுத்தே அழியாத செல்வம் கொண்டுவந்தேன். அழகழ கான கருத்தையெல்லாம் ஆனந்த மாகப் படித்தறிவோம்.” 196

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/201&oldid=860035" இலிருந்து மீள்விக்கப்பட்டது