பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பு. ரா. புருடோத்தம நாயுடு 93 பத்திகொள் கவிதா யோகத்தைப் புரிந்து பாரகத் தொளியினை வளர்க்கும் சித்தனெம் புருடோத் தமநம்பி பதத்தில் திருவினைப் பெறுகஇந் நூலே. என்ற பாடல் மூலம் அன்புப்படைலாக்கி மகிழ்கின்றேன். திரு நாயுடு அவர்கள் செடியாய வல்வினைகள் தீர்க்கும்’ திருவேங்கடவன்மீது ஆராக்காதல் உடையவர். இவர் தம் இறுதிக்காலத்தை தம் அருமைமகள் கப்பின்னையின் திருமாளிகையில் கழித்து பரமபதித்தவர். இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் நினைவுகூரும் வகையில் நான் பணியாற்றிய திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையின் சார்பில் நூல் வெளியீட்டு விழா' எடுக்கச் செய்தேன். மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் தமிழாசிரியையாகப் பணியாற்றி வரும் திரு. நாயுடுவின் அருமைமகள் புலவர் நப்பின்னை எம். ஏ. , பி.எட். அவர் களைப் படையல் படியைப் பெறச் செய்தேன். முதல் படி யைப் பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். திரு. நாயுடு அவர்களிடம் தந்தால் என்ன உணர்வு பெறுவேனோ அந்த உணர்வைப் பெற் றேன் அவர்தம் திருமகளார் நப்பின்னையிடம் தந்ததால். என் மனமும் முழு நிறைவு பெற்றது.