பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 52 மலரும் நினைவுகள் ஏ. கே. செட்டியாரவர்கள். பொருளாதார அடிப்படை யில் செல்வத்தைச் சேர்க்கவில்லை; சாதாரணமாக நம்மைபோல் அதை அவர் அதிகமாக ஆசைப்படுவ தில்லை. இறுதி மூச்சு இருந்தவரை மனநிறைவுடன் வாழ்ந்த மாபெரும் பெரியாராகவே திகழ்ந்தார். வையத் தில் வாழ்வாங்கு வாழ்ந்தவர். அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்ற பொன்மொழிக்கு இலக்கணமாகத் திகழ்ந்த ஒரு மாபெரும் மேதை. அவர் என்பால் காட்டி வந்த அன்பு, மதிப்பு, மரியாதை எல்லாம் என்றுமே என்னால் மறக்க முடியாது. இறுதிக் காலத்தை ஒரு வெள்ளை வேட்டி சாமியார் போலவே கழித்தவர், கோட்டையூர் தந்த மாணிக்கம்.