பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மலர் காட்டும் வாழ்க்கை

யாகக் கண்டு பழகாத நிலையிலும் பரந்து வளர்வது என்பதும், நட்பு இந்த உலகில் மட்டுமின்றி மறுமை யுலகிலும் மன்னுதல் பெறும் என்பதும், நண்பன் தவறு செய்யும்பொழுது இடித்துத் திருத்துதல் மற்றவொரு நண்பனின் கடமை என்பதும், பழந் தமிழர் நட்புச் செல்வத்தைச் சிறப்பாகக் கருதினர் என்பதும் நன்கு போதரும்.