பக்கம்:மலர் மணம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மலர்

“சொன்னுல் நீங்கள் ஆதரவு கொடுப்பீர்கள் அல்லவா ?” -

{{ 97,

‘ஏன், சொல்லுங்கள்.”

“ என்ன என்று தெரிந்துகொள்ளாமல், ஆதரவு கொடுப்பதாக நான் எப்படிச் சொல்வது?”

“அப்பா எனக்குத் திருமணத்துக்கு ஏற்பாடு செய் திருக்கிறார், புதன்கிழமை பரியம் (நிச்சயதார்த்தம்) நடத்தப் போகிறார்களாம்.”

“ஓ, அப்படியா, நல்லது, மகிழ்ச்சியான செய்தி தான் சொல்லுகிறாய். மாமா எனக்குத் தெரிவிக்கமாட் டார் என்பதற்காக, நீ கடிதம் எழுதியைா, கானும் பரியத்தில் கலந்துகொள்வதற்காக. அப்படியென்றால் எங்கள் வீட்டிற்கும் தெரிவிப்பீர்கள் என்று நினைக் கிறேன். பகை நீங்கிப் பழையபடி உறவு திரும்பி வி ட் ட த ா? என்றைக்கிருந்தாலும் கொண்டானும் கொடுத்தானும் கூடிக்கொள்ள வேண்டியது தானே.”

‘கொண்டானும் கொடுத்தானும் இன்னும் கூடிக் கொள்ளவில்லை. இனிமேல் கூடிக்கொள்வதற்காகத் தான் உங்களே வரவழைத்தேன்.’

“ உண்மைதான். இப்பொழுது முதலில் நாம் இரு வரும் கூடிக்கொண்டோமே.”

‘நீங்கள் பேசுவதைப் பார்த்தால் நாம் இருவரும் கூடிக்கொண்டவர்களாகத் தெரியவில்லையே.”

‘நீ என்ன சொல்கிறாய் அல்லி ?” ‘இன்னும் புரியவில்லையா ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/32&oldid=656272" இலிருந்து மீள்விக்கப்பட்டது