இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கோவிந்தா!
“கண்ணிரண்டும் இமையாமல் செந்நிறத்து
மெல்லிதழ்ப்பூங் கமலத் தெய்வப்
பெண்ணிரண்டு விழிகளையும் நோக்கிடுவாய்
கோவிந்தா! பேணி னோர்க்கு
நண்ணிரண்டு பொற்பாதம் அளித்திடுவாய்
சராசரத்து நாதா! நாளும்
எண்ணிரண்டு கோடியினும் மிகப்பலவாம்
வீண்கவலை எளிய னேற்கே!”
1. பா. க. தோ.பா. கோவிந்தன் பாட்டு-1