பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சி உரை I 1. நாடோடிப் பாடல்களின் தோற்றமும் இயல்பும் பேசத் தெரிந்த மனிதன் மனிதன் பேசத் தெரிந்தவன்; தன்னுடைய உணர்ச்சியையும் கருத்தையும் பிறருக்கு வெளிப்படுத்தத் தெரிந்தவன். விலங்கினங் கள் ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்தினுலும் மனிதனைப்போல வெளியிடும் அறிவும் ஆற்றலும் அவற்றுக்கு இல்லை. மனிதனே தக்கது, தகாதது என்று உணரும் அறிவு பெற்றிருக்கிருன்; சிந்திக் கும் திறமை பெற்றிருக்கிருன்; பல குணங்களின் வெளியீடான உணர்ச்சியைப் பெற்றிருக்கிருன்; அவற்றை வெளியிடும் மொழி யாற்றலேயும் அதற்கு ஏற்பப் பண்பட்ட கருவிகளேயும் பெற்றிருக் கிருன். அதனல், சில விலங்குகளிடம் சில சமயங்களில் ஒலி உண்டானுலும் மனிதனேப்போலத் தம் கருத்தை ஒலி மயமாக்கி வெளியிடும் ஆற்றலை அவை பெறவில்லை. காக்கை, குருவி முதலியன ஒருவாறு தம்முடைய குரலில்ை தம் கருத்தை வெளியிடுகின்றன என்றும், அவற்றிற்கும் மொழி உண்டு என்றும் ஆராய்ச்சி வல்லுகர்கள் சொல்லுகிருர்கள். நம் காட்டுப் பழங் கதைகளிலும் விலங்கின் மொழிகளே உணர்ந்த வர்கள் இருந்தார்கள் என்ற செய்தி வருகிறது. அறுபத்துமூன்று காயன்மார்களில் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனருக்கு விலங்கு, பறவை முதலியவற்றின் மொழி தெரியுமென்றும், அவை பேசுவனவற்றை அவர் கூர்ந்தறிந்தாரென்றும், அதனால் அவருக் குக் கழறிற்றறிவார் என்ற பெயர் உண்டாயிற்றென்றும் பெரிய புராணம் கூறும். ஆயினும் அந்த ஒலிகள் மிகச் சிலவே, மனித லுடைய மொழியைப் போல நுட்பமும் விரிவும் உடையன அல்ல. - - இவ்வாறு உயிர்க் குலங்களுக்குள் பிற உயிர்களுக்கில்லாத பெரும் பேருகிய மொழியைப் பெற்ற மனிதன் வரவர அதனை வளப்படுத்திக் கொண்டான். முதலில் பண்டங்களின் பெயர்களே 1. சேரமான் பெருமாள் நாயனர் புராணம், 14, 16,