பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்ணத்தி 9 மெய் வழக்கு என்பது உண்மை வரலாற்றையும், புற வழக்கு என்பது கற்பனையையும் குறித்தல் கூடும், கட்டுக் கதைகளைச் சொல்லும்போது, பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி” என்று குறித்தார் தொல்காப்பியர். அது உரை நடையில் வருவது. அது போன்ற கற்பனையைப் பண்ணத்தியென்று அக்காலத்தில் சொல்லி யிருத்தல் கூடும். அடுத்தபடி, இஃது, எழுதும் பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி என்ப' என்று கூறுகிருர் உரைகாரர். வாய் மொழியாக வருவது, எழுதப் பெருதது என்பதைக் குறிக் கவே இவ்வாறு எழுதினர் போலும். பிறகு பண்ணத்திக்கு உதாரணம் கூறும்போது, நாடகச் செய் யுளாகிய பாட்டுமடை, வஞ்சிப் பாட்டு, மோதிரப் பாட்டு, கட கண்டு என்பவற்றைச் சொல்கிருர், கூத்தில் இடையிடையே பாடும் பாட்டையே நாடகச் செய்யுளாகிய பாட்டுமடை என்று குறிக்கிருர், வஞ்சிப் பாட்டு என்பது ஒடப் பாட்டு; இன்றும் மலையாளத்தில் ஒடப் பாட்டை வஞ்சிப் பாட்டு என்று வழங்கு கிருர்கள். மோதிரப் பாட்டு, கடகண்டு என்பவை அக்காலத் தில் வாய் மொழியாக வழங்கியவை போலும். கவிஞர்களின் பாட்டிலே வரும் பொருள் இந்தப் பண்ணத்தி யிலும் வரும்; ஆனல் அதில் வருவது போலத் தெளிவும் தொடர்பும் இரா. அதனல், 'பாட்டிடைக் கலந்த பொருளவாகி' என்று இலக்கணம் கூறினர். இதுவும் ஒசையாலும் தாளத்தாலும் பாட் டென்றே சொல்லத்தக்கது; ஆனல் பாட்டைப்போல வரையறை செய்ய முடியாதது. அதனல், 'பாட்டின் இயல' என்ருர். இந்த இரண்டு இலக்கணங்களும் நாடோடிப் பாடல்களுக்கு உரியன. ஆதலின், பண்ணத்தி என்ற பெயரால் தொல்காப்பியர் குறிக்கும் இலக்கிய வகை நாடோடிப் பாடல்களே என்று கொள்வது பொருத்தமென்று தோன்றுகிறது. பண்ணத்தி (பண் நத்தி) என்ற சொல்லுக்கு, பண்ணே விரும்புவது என்று பொருள், இசைப் பாட்டில் வரையறையான பண் அமைதியிருக்கும்; இப் பாட்டிலும் இன்னேசை இருப்பினும் இசைப் பாட்டுக்குரிய வரையறையில்லை. ஆதலின் பண்ணமைந்த பாடல் என்னுமல் பண்ணத்தி என்ருர், இசைப் பாட்டைப் போன்றது; ஆனல் அதுவேயன்று; இரண் டிலும் இன்னிசை உண்டு. கவியைப் போன்ற பொருளை உடையது; ஆளுல் அது அன்று அந்தப் பொருள் தொடர்பின்றி இடை யிடையே விட்டு விட்டு வரும். பாட்டைப் போன்ற ஒசையுடை