பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 ஆராய்ச்சி உரை இன்னும் பலவற்றைச் சொல்லலாம். ஆயினும் ஒருவாறு மிகுதியாக வழங்குபவற்றை எண்ணி மேலே கூறியபடி, (1) தொழில் செய்வார் பாடல், (3) இன்பப் பாடல், (3) உணர்ச் சிப் பாடல், (4) குழந்தைப் பாடல், (5) விளையாட்டுப் பாடல், (6) கருத்துப் பாடல், (?) கதைப் பாடல் என்று ஏழு பகுப்பாகப் பிரித்துக்கொள்ளலாம், வரிப் பாடல்கள் சிலப்பதிகாரத்தில் வரிப் பாடல்கள் என்று சில பாடல்கள் வருகின்றன, அவை இளங்கோவடிகளால் இயற்றப் பெற்றவை. இயல்பாக இக் காட்டில் வழங்கிய, பல வரிப் பாடல்களே அடியொற்றி அவர் அமைத்துக்கொண்டவை அவை என்றே சொல்ல வேண்டும். கானல்வரி, ஆற்றுவரி, சார்த்துவரி, முகமில் வரி, நிலவரி, முரிவரி, திணைகிலவரி, மயங்குதிணைநிலவரி, சாயல் வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்சூழ்வரி, குன்றக் குரவை, அம்மானேவரி, கந்துகவரி, ஊசல்வரி, வள்ளேப் பாட்டு என்ற பாடல்கள் அதில் வருகின்றன. இவை பண்ணத்தியாகிய நாடோடிப் பாடல்களே கினைத்துப் பாடியவையே ஆகும். சில எடுத்துக் காட்டுகளைக் கொண்டு இதனை உணரலாம். . அம்மானவரி என்ற பாட்டு இளங்கோவடிகள் பாடி அமைத் தது. மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தில் திருவம்மானை என்றே ஒரு பகுதியிருக்கிறது. மூவர் அம்மானே என்று ஒரு தனி நூல் உண்டு. கலம்பகம் என்ற பிரபந்தத்தில் அம்மானை என்பது ஓர் உறுப்பு. இவை யாவும் புலவர் பாடியவை; ஆயினும் மகளிர் பாடுவனவாக அமைந்தவை. தமிழ் நாட்டுப் பெண்கள் அம்மா இனக் காய்களே வைத்துக்கொண்டு ஆடும்போது பல பாடல்களைப் பாடுவார்கள். அந்தப் பாடல்களைக் கேட்டு அந்த மெட்டில் அமைத்தவையே இப் பாடல்கள். அப்படியே மற்ற வரிப்பாடல் களுக்கும் 573-11). இலக்கிய உலகத்தில் மூலம் இருப்பதை உணரலாம. • நாடோடிப் பாடல்களின் உருவத்தை இலக்கியம் படைத்த புலவர்களும் எடுத்தாண்டார்கள் என்பதற்கு இப்போது கிடைப்ப வற்றுக்குள் பழைய எடுத்துக்காட்டு இளங்கோவடிகள் சிலப்பதி காரத்தில் பாடியுள்ள வரிப் பாடல்கள். - o . . . .