பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஆராய்ச்சி உரை தில் மட்டுமன்றிப் பாடும் பாட்டிலும் தோன்ற வேண்டும் என்பது பெறப்படும். குறி சொல்லும் குறத்தி மலைவளத்தையும் குறி கூறும் தன் தொழிலையும் புலப்படுத்திப் பாடுகிருள் ஏற்றம் இறைப்பவன் தன் வயலின் இயல்பையும் தண்ணிர் இறைக்கும் தொழிலின் இயல்பையும் ஏற்றப் பாட்டில் பாடுகிருன், ஆதலின் அவை வரிப் பாட்டுகளாக அமைகின்றன. இவ்வரிக் கூத்தில் விநோதக் கூத்து என்று ஒருவகை உண் டென்று தெரிகிறது. மேலே காட்டிய சூத்திரம் அந்த விநோதக் கூத்தையே குறிப்பது. இவ்வரி யென்பதனே விலனும் தொழிலும் தோன்ற நடிக்கும் விநோதக் கூத்து என்பாரும் உளர்' என்று அடியார்க்கு கல்லார் எழுதுவதிலிருந்து இது புலனுகிறது. பல்வரிக் கூத்து வேறு ஓரிடத்தில், இவ்வரி யென்பதனைப் பல்வரிக் கூத்தென் பாரும் உளர்" என்று கூறி ஒரு பழைய பாடலே மேற்கோள் காட்டுகிரு.ர். அப்பாடல் வருமாறு: சிந்துப் பிழுக்கை யுடன்சந்தி யோர்முலே கொந்தி கவுசி குடப்பிழுக்கை-கந்தன்பாட் டாலங்காட் டாண்டி பருமணல் நெல்லிச்சி | சூலந் தருநட்டம் தூண்டிலுடன்-சீலமிகும் ஆண்டி அமண்புனவே டாளத்தி கோப்பாளி பாண்டிப் பிழுக்கையுடன் பாம்பாட்டி-மீண்ட கடவுட் சடைவீர மாகேசங் காமன் மகிழ்சிந்து வாமன ரூபம்-விகடநெடும் பத்திரம் கொற்றி பலகைவாள் பப்பரப்பெண் பத்தசம் பாரம் தகுணிச்சம்-கத்து * முறையீண் டிருஞ்சித்து முண்டித மன்னப் பறைபண் டிதன்புட்ப பாணம்-இறைபரவு பத்தன் குரவையே பப்ப்றை காவதன் ஏத்திவரும் கட்களி யாண்டு விளையாட்டுக் - கோத்த பறைக்குடும்பு கோற்கூத்து-மூத்த கிழவன் கிழவியே கிள்ளுப் பிருண்டி அழகுடைய பண்ணிவிக டாங்கம்-திகம்செம்பொன் ~ அம்மண பந்து கழங்காட்ல் ஆலிக்கும். - 1. சிலப். 14:150 உரை. 2. சிலப் 18, உரை: