பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் எழுத்துத்துறையில் 43 வருடங்களாக இலக்கியப் பணி புரிந்து கொண்டிருக்கும் வல்லிக்கண்ணன் சிறுகதைகள்,நாவல்கள்,கட்டுரைகள், புதுக்கவிதை,மொழிபெயர்ப்பு முதலிய பலவற்றிலும் பெயர் பெற்றிருக்கிறார். 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 'பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை' 'சரஸ்வதிகாலம்' 'காலத்தின் குரல்'போன்ற இவருடைய ஆய்வு நூல்கள் இலக்கிய வரலாற்று நூல்களாகவும் அமைந்துள்ளன. 'தமிழில் சிறு பத்திரிகைகள்' பற்றிய இவருடைய ஆய்வு குறிப்பிடத் தகுந்தது.இவருடைய 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் ' என்ற நூல் சாகித்ய அகாடமிப் பரிசைப் பெற்றுள்ளது. படிப்பதையும் எழுதுவதையுமே வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் இவருக்கு இப்போது வயது 65. இவருடைய இயற்பெயர் ரா.சு.கிருஷ்ணசாமி.திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரம் இவரது சொந்த ஊர்.