உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலபுலன்களையெல்லாம் விற்றுவிட்டு, நகைநட்டுகளையெல்லாம் அடமானம் வைத்துவிட்டு, சிங்கைக்கு வந்து அழைத்தவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியாமல் சில தனியார் கம்பெனிகளிலே வேலைக்கு அமர்ந்து அவர்களால் கைவி டப்பட்டு சிங்கை வீதிகளிலே அலைந்து கொண்டிருக்கின்ற தமிழர்களையும் எண்ணிப் பார்க்கிறேன். எனவே தமிழன் உலகத்தின் பல பகுதிகளில் வாழ்ந்து கொண்டும் இருக்கிறான். வாடிக் கொண்டும் இருக்கிறான். வாடிக் கொண்டிருக்கின்ற தமிழனுக்கு ஒரு வழி காண வேண்டுமென்று நேற்று உங்களுடைய பிரதமரிடத்திலே கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவரும் இதை மிகுந்த அக்கறையோடு கேட்டு நிச்சயமாக தகுந்த தீவிரமான நடவடிக்கை எடுக்க நான் உதவுகிறேன் (பலத்த கைதட்டல்) என்றார். இதை ஏமாந்த தமிழர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக நான் அறிவிப்பதோடு இனியும் ஏமாறாமல் இருக்க உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்ச் சமுதாயம் பல இடங்களில் பல இனங்களோடு சேர்ந்து வாழ வேண்டியிருக்கின்றது. இனம் கண்டு வாழ வேண்டியிருக்கிறது. சிங்கப்பூரானாலும், மலேசியாவானாலும், எங்களுடைய தலைவர், எங்கள் அண்ணன் பெரியார் வழி வந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் (கைதட்டல்) "ஆங்காங்கு வாழும் தமிழர்கள் அந்த மண்ணுக்குரியவர்களாக அந்த மண்ணின் நலன்களில் நாட்டம் உடையவர்களாக, அதே நேரத்தில் மொழியை, இனத்தை, மொழி உணர்வை, இன உணர்வை மறக்காதவர்களாக வாழவேண்டும்" என்று சொன்ன அந்த வார்த்தைகளை நான் வேதமாக (கைதட்டல்) என்னுடைய நெஞ்சிலே செதுக்கி வைத்திருக்கின்றேன். அதை இங்கே வெளியிடுவதில் நான் பெருமைப்படுகிறேன். 12