பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

25



17. அதியமான் அஞ்சுகின்றானா?


அதியமான் போர்க்களம் புக அஞ்சினான். அவ்வை அவனை நோக்கிக் கூறினாள்:

மறப்புலி சீறி எழுந்தால் அதனை எதிர்க்கும் மான் கூட்டம் உண்டோ? வானத்தில் கதிரவன் எழுந்தால் அதனை எதிர் நிற்கும் இருள் உண்டோ? பாரம் ஏற்றிய வண்டியை ஆழ் மணலிலும், பாழ் நெறியிலும் இழுக்கும் பகட்டுக்குப் போகமுடியா இடம் உளதோ?...

வீரர் தலைவ! நீ போர்க்களம் சென்றால் உனை எதிர்த்துப் போரிடும் போர் வீரர் உண்டோ.

நின் வீரக் கைகள், வெற்றியை நோக்கி உயர்கின்றன.நின் மலைத் தோள்கள், வெற்றிச் சிகரம்போல் நிமிர்கின்றன.

நெடுமான் தன் தோளைப் பார்த்தான்; இடையிற்கட்டிய, வாளைப் பார்த்தான்; அவன் மனக் கண்முன் பகைவர் தலைகள் உருண்டன!


18. தண்புனலும் தறுகண் யானையும்.


யானை ஒன்று ஊர்க்குளத்திற்கு குளிக்கச் சென்றது. சிறுவர்களும் அதன் பின்னால் திரண்டு சென்றனர்.

யானை, குளத்தில் இறங்கிக் குளித்தது. சிறுவர்களும் குளத்தில் இறங்கிக் குளித்தனர். யானை, அவர்கள் மேல் நீரை வாரி இறைத்தது.சிறுவர்களும் அதன் மேல் நீரை வாரி இறைத்தனர்...