பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

31


ஆகா என்ன அழகு. நீலக் கடல் நடுவே நெருப்புப் பந்து மிதப்பதுபோல் காட்சியளிக்கிறதே

பாணனும் ஆனந்தக் கூத்தாடுகிறான்.

ஒருகணம் கழிகிறது. இருவரும் முழு நிலவை கை தொழுகின்றனர். ஏன்?

வண்ண நிலவல்ல அது, மாவளவன் வெண் கொற்றக் குடை. துன்பம் துடைக்கும் குடை. துயர் நீக்கும் நற்குடை. எல்லையிலா இன்பம் பயக்கும் எழில் குடை என்று வாழ்த்துகின்றனர்.


24. புறப்படு போர்க் களத்திற்கு!

“விறலியே புறப்படு” என்றான் பாணன்.

“எங்கே? என்றாள் விறலி.

“போர்க்களத்திற்கு”

“ஐயோ நான் மாட்டேன், பயமாயிருக்கிறது”

“போர் செய்யவல்ல, பொருள் வாங்க”

“செத்த வீட்டில் தருமமா? போர்க்களத்தில் பரிசா?”

சாதாரண போர்க்களம் அல்ல விறலி, பெருவழுதியின் போர்க்க்ளம். கிழப் பருந்திற்கும் விருந்தளிக்கும் பெரு வழுதி நம்மையா சும்மா விடுவான். தயங்காதே. விரைவில் புறப்படு. அமுதம் கிடைக்கும். அழகிய பட்டாடை கிடைக்கும் விதவித நகைகளும் கிடைக்கும்.

துள்ளிழெந்தாள் விறலி.