பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்



தமிழை வாழ்விக்கும் புலவரே நீண்ட நாள் வாழ்தற்கு உரியர். நான் அரசன் ஆயினும் எளியன்” என்றான் அதியமான்.

ஒளவை பேச முயன்றாள். நா தழுதழுத்தது. கண்களில் நீர் திரையிட்டது...

“தமிழ்க் குலம், தமிழ்க் குலம்” என்றாள்.


31. என்றும் குதூகலம்!

ஒருநாள், இரண்டு நாட்கள் அல்ல. பல நாட்கள் சென்றோம். ஒவ்வொரு நாளும் முதல் நாள் போன்ற குதுாகலத்தோடு வரவேற்றான் அதியமான்.

அவன் பரிசில் கொடுப்பதும் அப்படித்தான். நேரம் நீண்டாலும் சரி, குறுகினாலும் சரி, பரிசு கிடைப்பது என்னவோ உறுதி!

யானைக் கோட்டில் வைத்த கவளம், அதன் வாயிற்சென்று வீழ்வது தவறாதது போன்று, அதியமான் கைகளிலுள்ள பரிசில், எங்கள் கைகளை அடையத் தவறுவதில்லை.

பரிசுக்கு ஏங்கும் நெஞ்சப் பறவையே, பறந்து போ! அதோ, அதியமான் உன்னை எதிர்பார்த்து நிற்கிறான்.


32. தந்தை-மகன் ஆட்சி

பண்டையத் தமிழகம்.

எருதுகள் பூட்டப் பெற்ற வண்டிகளிலே உமணர் உப்பு ஏற்றிச் செல்கின்றனர்.