பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்



“புறப்பட்டு விட்டேன். பக்கத்து நாட்டிற்குச் செல்கிறேன். அவன் ஒரு சிற்றரசன்தான். வறுமையால் வாடுகிறான். வரகஞ் சோறுதான் கொடுப்பான் அதுவே அமுதம் மாவேந்தரேயாயினும், மதியாதாரை நாங்கள் மதிப்பதில்லை. அவர் செல்வத்தை மதிப்பதில்லை. அது வேம்பு” என்றார் புலவர்.

புலவரைத் தேற்றிப் பரிசளித்து அனுப்பினான் வளவன்.


87. கடல் மேல் எழும் கதிரவன் நீ

வெற்றிக்குக் கட்டியங் கூறி, குருதிக் கறை படிந்த வாட்கள் ஆயிரம் அவை, செவ்வானத்தின் வனப்புப் போன்றன!

கால்கள் ஒடுவதாலே கழல்கள் அறுந்து விழ்ந்தன... அவை, கொல்லேற்றின் கொம்பு போன்றன...

அம்பு பட்டதால் மார்புக் கவசங்களில் துளைகள் தோன்றின... அவை, இறந்து பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் இலக்கம் போன்றன...

பரிகள், வலமும் இடமும் பாய்ந்து, வாய்களிற் குருதி படிந்து, எருதைக் கவ்விய புலி போன்றன...

களிறுகள், கோட்டைக் கதவம் பிளந்து, கோடு முறிந்து, உயிர் உண்ணும் கூற்றுவன் போன்றன...

ஆனால் அவனோ தாவும் குதிரையொடு தகதகக்கும் தேர் ஏறிக் கருங்கடலில் ஞாயிறுபோற் காட்சி தருகிறான்.

அவன் தேரோடு போராடும் பகைவர் வேரோடு பெயர்ந்து விழுவர்... தாயற்ற குழந்தை போற்கதறி அழுவர்