பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8"சொல்லுக்கு நடுவில் சில விடத்து ஐகாரத்தின் பின்


னும், யகர மெய்யின் பின்னும் வருகிற நகர மெய் யோடு ஞகர மெய் போலியாய் வரும்." சூத்திரம்: 'ஜகான் யவ்வழி கவ்வொடு சில்வழி ஞஃகான் உறழும் என் மரும் உளரே' குறிப்பு:- நயம் - ஞயம்; நாஞ்சில் - ஞாஞ்சில்; நேயம் - ஞேயம் என மொழி முதல் நகரத்திற்கு ஞகரமும், ஞண்டு - ஞெண்டு என மொழி முதல் அகரத்திற்கு எகரமும் போலியாய் வரும். ஐந்து - அஞ்சு, உய்ந்தனன் - உய்ஞ்சனன் என நகர, தகரங்களுக்கு ஞகர, சகரங்கள் போலியாய் வரும். பித்து - பிச்சு வைத்த - வைச்ச எனத் தகரத் திற்கு சகரம் போலியாய் வரும். நேயம் - நேசம், கயம் - கசம் என யகரத்திற் குச் சகரம் போலியாய் வரும், இறுதிப் போலி முகம் - முகன்; 'முகம்' என்பது பால் பகா வஃறி ணைப் பெயர். அதன் ஈற்றில் நின்ற மகரம் னகர மாய் நின்றது. 'பால் பகா வஃறிணைப் பெயர்களின் ஈற்றிலே நின்ற மகரமெய்க்குப் பதில் னகரமெய் வ ரு த ேல இறுதிப் போலியாம்' சூத்திரம்: "மகர இறுதி அஃறிணைப் பெயரின் - னகர மோடு உறழா நடப்பன உளவே" குறிப்பு:- பந்தல் - பந்தர் - இதில் லகரத்திற்கு ரகர போலியாயிற்று.