56
மகனை 'அப்பன் வந்தான்' என்றும் மகளை அம்மை வந்தாள் என்றும் கூறுவது மரபு வழுவமைதி யாகும.
"மகிழ்ச்சியிலுைம். மேன்மைப்படுத்திச் சொல்லுத லிலுைம், சிறப்பினுலும், பழிப்பிலுைம் பாலும் திணை யும் வழுவி வந்தாலும் வழுவமைதியேயாம்"
சூத்திரம்:
"உவப்பினும் உயர்வினும் சிறப்பினும் செறலினும்
இழிப்பினும் பால் திணை இழுக்கினும் இயல்பே"
பால் இடவழுவமை தி
பால்
‘வெயிலெல்லாம் மறைத்தது மேகம்' - இதில் வெயில் என்னும் ஒருமைப் பாலில் எல்லாம் என்னும் பன்மைப் பாற் சொல் சேர்த்துச் சொல்லப்பட்டது.
'இரண்டு கண்ணும் சிவந்தது - இதில் இரண்டு என்னும் பன்மைப் பாலில் சிவந்தது என்னும் ஒருமைப் பார் சொல் சேர்த்துச் சொல்லப்பட்டது.
இடம்
சாத்தன் தாய் இவை செய்வேனே? - இதில் யான் எனச் சொல்ல வேண்டும். தன்மையில் தாய் எனப் படர்க்கைச் சொல் சேர்த்துச் சொல்லப்பட்டது. இது தன்மைப் படர்க்கை,
எம்பியை ஈங்குப் .ெ ப ற் ேற ன் -- இதில் தன் தம்பியை முன்னிலைப் படுத்தி அவனையே நோக்கிக் கூறுதலால் நின்னையெனச் சொல்ல வேண்டும்.