மாணவர்கள் சிந்தனைக்கு சில வரலாற்றுச் சிறப்புகள்!
ജ്പേ8 நாதருக்கு முன்புள்ள ஆண்டுகளை கி.மு. என்றும், அவருக்குப் பின்வரும் ஆண்டுகளை கி.பி. என்றும் வரலாற்றாசிரியர்கள் காலத்தை வரையறுத்துள்ளார்கள். அதற்கேற்ப, மாணவர்கள் கீழ்க்கண்ட வரலாற்று நிகழ்ச்சிகளை நினைவில் நிறுத்துவது நல்லது. தேர்வுக்குரிய குறிப்பாகவும் இவை அமையலாம்:
ஏனென்றால், இந்திய வரலாற்று நாயகர்கள் யார் யார்? அவர்கள் எப்போது வாழ்ந்தார்கள்? என்னென்ன பணிகளைச் செய்தார்கள்? என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ள, இந்த ஆண்டுப்பட்டி பயன்படும் என்பதால் தொகுத்துக் கூறுகின்றோம். சிந்தனைப் பெட்டகத்திலே சிறையிடுக.
கி.மு. 567 கெளதம புத்தர் பிறந்தார். கி.மு. 327 மாவீரன் அலெக்சாண்டர்
இந்தியாவின் மீது படையெடுத்தார். கி.மு. 321 சந்திரகுப்த மெளரியன் மன்னராக
முடிசூட்டிக் கொண்டார். கி.மு. 273 மாமன்னன் அசோகன்
சக்கரவர்த்தியாகப் பதவி ஏற்றார்.
கி.மு.58 விக்ரம சகாப்தம் ஆரம்பம்
கி.பி. 78 சாகா சகாப்தம் துவக்கம்
கி.பி. 120 கனிஷ்கர் மன்னர் ஆனார்.
கி.பி. 405 - 411 சீன யாத்ரிகர் பாஹியான் இந்தியா வந்தார்
கி.பி. 606 ஹர்ஷவர்த்தனன் மன்னர் பதவியை ஏற்றார்.