பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/1

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மாண்புடைய மங்கையா 1. அழகை வெறுத்த அம்மையார் அழகு என்பது ஒரு பண்பு. இதனை அடைய விரும்பாதவர் எவரும் இலர். இஃது இயற்கை அழகு செயற்கை அழகு என இரு வகையாக இயம்பப் பெறும். இயற்கை அழகு அடையப் பெறாதவர் செயற்கையாலேனும் அழகை அடைய விரும்புவர். அத்தகைய அழகை ஆடவர், பெண்டிர் என்னும் இரு பாலாருள் பெண்பாலாரே மிகுதியும் பெற்றவர். அஃது அவர்களிடம் இயற்கையில் அமைத்த ஒரு தனி இயல்பு. அதனாலேயே அவர்கள் அழகு எனப் பொருள்படும் 'மாதர்' என்றும் ‘காதிகை' என்றும் குறிக்கப்படுகின்றார்கள். மாது என்னும் குற்றுகரச் சொல், 'அர்' என்னும் ஈற்றுப் போலி பெற்று வழங்கப்படுகிறது. ஆகவே, மாதர்கட்கே இயற் கையில் அமைந்த - அழகினைத் துறத்தல் எத் துணைச் சீரிய குணம் என்பதைச் சிந்திக்க வேண் டாவா? அவ்வாறு துறந்த தூய்மையர் யாரேனும் உளரோ எனில், உளர். என்பதை உணர்த்தவே இக்கட்டுரை எழுந்ததென்க. அந்தணர், அரசர், வணிகர், வேளாள் என் னும் நால் வகைக் குடிகளுள் வணிகர் முப்பிரிவினர். அவர்களை இப்பர், கவிப்பர்; - பெருங்குடியர் என்று