உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்துறை பற்றிய கருத்துப் பரிமாற்றக் குழு (Consultative- Committee) கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தண்ட பாணி பேசும் போது ராஜமன்னார் குழு தந்த அறிக்கையில், மத்திய மாநில அதிகாரங்கள் மறுபரிசீலனை பற்றி நல்ல கருத்துக் கள் இருப்பதாகவும், அதன்மீது மத்திய அரசு எந்தவித நடவடிக் கையும் எடுக்கவில்லை". என்று கூறியதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் திரு. தீட்சித் அவர்கள் அளித்த பதிலில், “ராஜமன்னார் குழு மாநில அரசால் அமைக்கப்பட்ட குழு என்றும், அந்த அறிக் கையின்மீது மாநில அரசு இதுவரை தனது அபிப்பிராயத்தை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை” என்றும் கூறியிருக்கிறார். ஆகவே, அந்தப் பதிலுக்கு ஏற்பவும், ராஜமன்னார் குழுவின் அறிக்கை பற்றி இந்தப் பேரவையின் கருத்துக்களைப் பெற வேண்டுமென்று மாண்புமிகு உறுப்பினர்கள் விரும்பியதற்கு ஏற்பவும், இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் சுயாட்சித் தன்மை கிடைத்திடவும், மத்தியில் உண்மையான கூட்டாட்சி ஒளிவிடவும், இந்தத் தீர் மானத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இந்திய நாட்டின் சுதந்திரக் கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது. வான்முகட்டைத் தொடுவதுபோல் அசைந் தாடும் அந்தக் கொடியின் கம்பீரம் காண, முகில்களைக் கிழித்துக் கொண்டு நமது விழிகள் தாவுகின்றன. வங்கம் தந்த தங்கக் கவி தாகூர் எழுதிய தேசிய கீதம் நமது செவிகளில் குற்றால நீர் வீழ்ச்சியின் சங்கீத ஓசையாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. அடி மைப்பட்டுக் கிடந்த நாடு, தன்னை விடுவித்துக்கொண்டு தலை நிமிர்ந்து கிளம்பிய வரலாற்று வரிகள், உலகப் புத்தகத்தில் கோடிட்டு வைக்கப்பட்டுள்ளன. சிறையிலிருந்த நாடு. விடுதலை பெற்று விட்டது. கதவு திறந். தது. பூட்டிய இருப்புக் கூட்டிலேயிருந்த கைதி, புன்னகை மலர வெளியே வருகிறான். தந்தையைக் காணாமல் தவித்துக் கொண் டிருந்த தளிர் நடைச் செல்வம், இளங்கரம் தூக்கி, தாவியோடு கிறது, அவனைத் தழுவிக் கொள்ள! அவனும் அடக்க முடியாத மகிழ்ச்சி வெள்ளம் கரை புரள மகனைத் தூக்கி முத்தமிடக் கரங் களை நீட்டுகிறான். கைகள் இயங்க முடியாமல் தவிக்கின்றன. சிறையிலிருந்துதான் விடுபட்டுவிட்டானே; இன்னும் என்ன தடை? தன்னை யார் தடுப்பது? சுற்றும் முற்றும் பார்க்கிறான். அவன் சிறையில் இல்லை; சுதந்திர பூமியில்தான் இருக்கிறான். பிறகு யார் தன் குழந்தையைச் கூடத் தழுவிட முடியாமல் அவனைக் கட்டும்