உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

33

உதவி செய்கிறது. ஆனால் இங்கு நம் அமைச்சர் அவர்களால் வி காலையில் தரப்பட்ட இந்த அறிக்கையில், இங்கு கட்டப்படுகிற திட்டங்களுக்கும், இங்கு செய்யப்படுகிற பாசன வேலை களுக்கும் மக்களிடமிருந்துதான் நாங்கள் பெரிதும் எதிர்பார்க் கிறோம் என்ற வாசகம் காணப்படுகிறது. இத்தகைய நிலைமை வடக்கில் உள்ள ராஜ்யங்களில் இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை. ஏனென்றால் நான் அடிக்கடி வடக்கே போகாதவன். ஆகவே, மக்களிடமிருந்து வாங்கித்தான் நாம் இக்காரியங்களைச் செய்ய வேண்டுமா என்று கேட்டுக் கொள்வதோடு, இந்த நீர்பாசனத் திட்டம் மான்யத்தின்மீது கொண்டுவரப்பட்ட இந்த வெட்டுப் பிரேரணையை நான் ஆதரிக்கிற இந்த நேரத்தில் இந்த அணைக்கட்டுக்களை யெல்லாம் இங்கு நீங்கள் கட்டவேண்டுமென்றும் இல்லாவிடில் நாங்கள் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே கட்டிக்கொள்கிற அணையையாவது அனுமதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டு உரையை முடித்துக் கொள்கிறேன்.

ல்