பக்கம்:மாபாரதம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

183


“பாரதப்போரில் கன்னன் தன்னிடம் அடைக்கலம் வந்த அசுவசேனன் என்ற பாம்பை அத்திரமாக ஏவுவான்; அதனை மறுமுறை விடவேண்டாம் உன்று அறிவுரை கூறுக” என்று அவளிடம் சொல்லிவிட்டு விடைபெற்று விதுரனின் மனை திரும்பினான்.

“ஆரம்பத்திலேயே அவன் முகவரியைத் தந்திருந்தால் தம்பியரோடு சேர்த்து இருக்கலாமே” என்று வருந்தினாள். கன்னனை இழப்பது தவிர அவளுக்கு வேறுவழியில்லை. பால் திரிந்துவிட்டால் இனி அதுபயன்படாது; தாக்கி எறிய வேண்டியது தான். வயிரம் பாய்ந்த மரத்தை வாள் கொண்டு வெட்டுவது சிரமம்; உயிரையே துரியனுக்குத் தர இருக்கும் வயிரக் குன்றை அசைக்க முடியாது: அவன் பகைவருக்குத் துரணாகி விட்டான். துணுக்குச் சுமக்கத் தெரியுமே அன்றிச் சுமையை எறியத் தெரியாது. சுமை தாங்கியாகிய கன்னனைப் பல்லக்கு ஏறச் சொன் னால் அவன் பழைய பல்லவியையே பாடுவான். துரியன் தனக்குச் செய்த நன்மைகளைப் பாராட்டி ஒரு இதழே வாசித்துக் கொடுப்பான்.

“யாரும் அறியாத என்னைத் தேரும் பேரும் கொடுத்து அங்க நாட்டின் அதிபதி ஆக்கினான். துரியன் அவன் நட்புக்கு அரியன். போருக்குச் சிறியன்; அவனை விட்டு விலகுவது அறியேன்” என்று இலகுகனித வாய் பாட்டை ஒப்புவிப்பான். அதனால் உண்மையைச்சொல்லி உளறு வாயளாக ஆக அவள் விரும்பவில்லை. கண்ணன் சொற்படியே நடப்பதாகத் திண்மையாக உறுதி தந்தாள். அத்தை மடி மெத்தையடி என்று பாடிக் குழந்தையாக இருந்தபோது மகிழ்வித்த கண்ணன் தன் மெத்தைப்படி ஏறி அவள் சித்தத்தை மாற்றி ஒரு கலக்கு கலக்கிவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/186&oldid=1044866" இலிருந்து மீள்விக்கப்பட்டது