இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
268
மாபாரதம்
சாவு என்பது மேலோன் கீழோன் என்ற பேதம் காட்டாமல் சம நீதியோடு இயங்கியது.
துவாரகையில் யாதவர்கள் தம்மைத் தாம் தாக்கிக் கொண்டு அழிந்த செய்தியும், கண்ணன் மறைந்த செய்தியம் அறிந்து பாண்டவர்களும் திரெளபதியும் வாழ்க்கையில் வெறுப்புற்றுத் தவவாழ்க்கையில் நாட்டம் செலுத்தினர். தம் பேரப்பிள்ளையாகிய பரீட்சித்திடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு இமயமலை நோக்கிச் சென்றனர்.
வழிப்பயணத்தில் ஒருவர் பின் ஒருவராக உயிர் நீத்து உலக வாழ்க்கையினின்று விடுதலை பெற்றனர் இறுதியில் தருமனும் துறக்க உலகம் சேர்ந்தான்.