பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

தன்னுறுதியும் விடா முயற்சியும் மன ஊக்கமும் கொண்டு செய்யப்படும் எச்செயலும் வெற்றி பெறும்; தன் முயற்சி உள்ளவனுக்குத் தெய்வம் தானகவே வந்து உதவி செய்யும்; கடமையே கருத்தாகக் கொண்டவனுக்குப் பொன்னும் பொருளும் புவியும் வசமாகும் என்பன போன்ற உயர்ந்த கருத் துக்களை விளக்குகிறது இக்கதை.

‘மாயத்தை வென்ற மாணவன்’ ஒர் அற்புதமான சிறுவர் இலக்கியம்.

பல ஆண்டுகளாகவே சிறுவர் இலக்கியப் படைப்பில் ஈடுபட்டு இனிய நூல்களை அளித்து வரும் திரு. நாசா நாச்சியப்பன் அவர்களின் இவ்வினிய கதையை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

-தமிழாலயம்