பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒவ்வொரு முறையும் அவன் கைகள் குகைச் சுவர்ப் பாறைகளையே தாக்கிக் காயப்பட்டன.

கடைசியில் மணிவண்ணனுடைய வாள் அவன் உயிரைக் குடித்தது. ஐம்பத்தாறு தேசங்களையும் அடக்கியாளும் மாமன்னரையே ஆட்டிப் படைத்த பெருஞ் சக்தி வாய்ந்த அந்த மந்திரவாதி, ஒரு சாதாரண மாணவன் கையால் உயிரிழந்தான்.

மந்திரவாதியின் தலையைத் துண்டித்த மணிவண்ணன் அதைத் தனியே ஒரு துண்டில் சுற்றி மூடிக் கட்டி எடுத்துக் கொண்டான். குகையில் பாறாங்கற்களை உருட்டி வந்து வைத்துக் கெட்டித்து அதை அடைத்தான். பிறகுதன் பஞ்சகல்யாணி இருந்த இடத்திற்கு வந்தான்.

59