பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைப்படைப்பின் ஆக்கம்

23

விமானத்திலிருந்து, குண்டுகள் எறியத் தானும் போகவேண்டும்' என்ற குறிக்கோளைத் தனக்கு வகுத்துக் கொள்ளுகிறான். இது அகயம்.

இயற்கைக் காலைப் போலவே பொய்க்காலின் இயக்கங்களை அவன் கட்டுப்படுத்துகிறான். பல மைல்கள் ஓடுகிறான். இரத்தம் வழிகிறது. கால் வலிக்கிறது. ஆனால் குறிக்கோளின் பிடிப்பால், அவன் தனது குறிக்கோளில் வெற்றி பெற்று விமானம் ஓட்டி, குண்டு எறிந்து நாஸிகளை வீழ்த்துகிறான். இது புறவயம்.

காலை வெட்டியெடுத்த பிறகு விமான ஓட்டியாகும் கனவு யாருக்கும் இருப்பதில்லை. அசாதாரணமான ஒரு குறிக்கோளை அவன் மனத்தில் வளர்க்கிறான். போரின் தேவையும், தனது இயலாமையை ஒழித்து, விமானமோட்டும் ஆசையையும் வளர்த்து, குறிக்கோளை நிறைவேற்ற நடைமுறைப் பயிற்சிகளில் உடல் வலியையும் பொருட்படுத்தாமல் முயன்று வெற்றி பெறுகிறான்.

அகவயக் குறிக்கோளை, புறவய உண்மையாக்க அவன் தீவிரமாக உழைத்து, வெற்றி பெறுகிறான். இது கதை.

கலை மனிதனது நடைமுறைச் செயல்களைப் புகைப்படம் பிடிப்பது போலப் படைக்கவில்லை. உணர்வும் நடைமுறையும் ஒன்றாகி, உண்மைப் பொருளினின்றும் வேறுபட்ட கலைப் பொருள், கலையுலகில் கிடைக்கிறது. கலையுலகம், யதார்த்தப் புற உலகில் இருந்து தோன்றியதானாலும், உள்ள கலை உணர்ச்சியின் (அழகியல் உணர்வின்) தாக்கத்தால் வேறொரு கலை உலகமாக உருவாகிறது.

ஒரு கலைப் படைப்பு எப்படிப் படைக்கப்படுகிறது என்பதை யாருக்கேனும் விளக்க முடியும். ஆனால் ஒரு கலைப் படைப்பைப் படைக்க யாருக்கும் கற்றுக் கொடுக்க முடியாது. கலைப்படைப்பைப் படைப்பதற்குத் தேவையான கலைத்திறனும் அழகுணர்ச்சியும் புறஉலகை அழகியல் விதிகளுக்கேற்றாற் போல் உணரும் திறனும் படைப்பாளிக்குத் தேவை.

நடைமுறை என்பது கலைப்படைப்பாளியும் (Subject) கலைப்படைப்பும் (object) சந்திக்கும், களம்; இவையிரண்டின் பரஸ்பரத் தாக்கம் நிகழும் இடம். கலை உலகில் கலை உத்தி என்பது கலைஞனும் உண்மையான உலகமும் 'சந்திக்கும்' இடம்.

விஞ்ஞான தர்க்க முறைக்கும், கலையில் தர்க்க முறைக்கும் சில பொதுவான அம்சங்கள் உள்ளன. விஞ்ஞான தர்க்கமுறையில் மூன்று பிரமேயங்கள் உள்ளன என்று லெனின் கருதினார். அவையாவன: