பக்கம்:மீனோட்டம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசனம் 97 பானையா? இவ்வளவு பெரிய திருஷ்டி கழிப்பா? பிணமா? இத்தனை விதங்களில் நானா? ஏன்? ஏன்? ஏன்? ஏன்??? எதிர்வீட்டிலிருந்து வீணையில் மோகனம் கிளம்பி நெஞ்சில் கொக்கி மாட்டியிருக்கிறது. மோகனமா? கல்யாணியா? மோகன கல்யாணியா? குங்கிலியச்சுடர் போன்று குபுக் குபுக்-ஸ்வரப்பந்துகள் குயிரிடுகின்றன, குவிகின்றன, குலைகின்றன, குழைகின்றன, குமைகின்றன. இந்த ராகமுமில்லை, அந்த ராகமுமில்லை, எந்த ராகமு. மில்லை, ஆத்மாவின் ராகம் ஒரே ராகம்; அவரவர் உடன் கொண்டுவரும் அவரவரின் சொந்த ராகம். பிறவிக்காட்டில் மாட்டிக்கொண்டு திக்குத் தெரியாமல் எதிர்க்குரல் தேடி அலையும் அபயக் குரல். எதிர்வீட்டில் ஒரு பெண். வயது முப்பத்திரண்டாம். இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம். இங்கு நாங்கள் குடி வந்ததிலிருந்து நான் இன்னும் அவளை முகம் பார்த்ததில்லை. ஜன்னல் பக்கம் நிழல், மாடியில் துணி உலர்த்தவோ, கூந்தலை ஆற்றவோ, மாலை வேளையில் காற்று வாங் கவோ-ஊஹாம். அவளை அவள் பயிலும் வீணையின் இசையாய்த் தான் அறிவேன். தன் ஆவியின் கொந்தளிப்பை வீணையில் ஆஹுதியாய்ச் சொரிகின்றாள். அவள் தாபத்தின் தஹிப் புக்கு வீணை வெறும் வடிகாலாய் இல்லை. இன்று இவள் வாசிப்பைக் கேட்கையில் வீணை இவள் தலைவிதி. என் வேளை வரும்போது என் சிதையில் என் வீணையை என் தலைவிதியை என்னோடு எரித்துவிடுங்கள், என் வேளையே! எப்போது வருவாய்?’ என்கிற மாதிரி. தன் கை பிடிக்க உகந்த புருஷனுக்குக் காத்திருந்து காத்திருந்து அவன் வராமல் கடைசியில் கல்யாணம் என்று ஆனால் போதும் என்கிற நிலைமைக்கு வந்தாகிவிட்டது. கன்யா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/98&oldid=870476" இலிருந்து மீள்விக்கப்பட்டது