பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணாகப் பிறந்தேனா? பிறந்ததுதான் பிறந்தேன் நான் பெண்ணாகப் பிறந்தேனா? துகிலுக்குள் மூடுபடாத் தூயமுகம் காட்டித்தான் முகிலுக்குள் போய்நிலவை முகம்மூடச் சொன்னேனா? பிறந்ததுதான் பிறந்தேன் நான் பெண்ணாகப் பிறந்தேனா? முள்ளில்லாத முல்லைப்பூ முறுவலிக்கும் போதில்என் வெள்ளைப்பல் வெளிச்சமிட்டு வெவ்வெவ்வே' என்றேனா? பிறந்ததுதான் பிறந்தேன்நான் பெண்ணாகப் பிறந்தேனா? 56 0 மீரா கவிதைகள்