பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கள்வன்?

கிண்ணம் போல் காட்சிதரும் கமலப் பூவைக்

கீழ்த்திசையோன் முத்தமிடும் நேரம், பாலின்

வண்ணம்போல் மின்னுமுடை கழற்றி வைத்து

வனப்பொய்கை குளித்தேன் நான்; ஆயர் பாடிக்

கண்ணன்போல் கரையிலவன் தோன்றக் கண்டே

கள்வனெனப் பேரோசை எழுப்ப நெஞ்சில்

எண்ணமிட்டேன் இமைப்பொழுதில்; ஆனால் யாரும்

எடுத்தபொருள் எதுவென்றால் என்ன சொல்வேன்?

கீச்சலிடும் கிளிவாய்க்குப் பலியாகாமல்

கிளைதொங்கும் பழங்காக்கக் கதிரோன் மேற்கில்
மூச்சுவிடும் நேரத்தில் தோட்டம் சென்றேன்;
முள்வேலி ஒரத்தில் ஒதுங்கி நின்றே

ஆச்சரியப் பிறவியென என்னை நோக்கி

அவன்மெல்ல நடைபோடக் கள்வன்' என்று
கூச்சலிட நினைத்தேன் நான்; ஆனால் யாரும்